உள்ளூர் செய்திகள்
- ஒரகடம் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஒரகடம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள மாத்தூர் பகுதியில் வசித்து வருபவர் உமேஷ் சாஹு (வயது 36). ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கஜோல் சாஹு (வயது 28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள். 2 நாட்களாக குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வது குறித்து கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் காஜல் சாஹூ வீட்டின் அறையின் உள்ளே சென்று கதவை உள்தாழ்ப்பாள் போட்டு கொண்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.