ஒரகடம் அருகே தடுப்புச் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
- சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரகடம்:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 26). இவர் சொந்தமாக சோலார் பேனல் தொடர்பான வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் அடுத்த தாழம்பட்டு பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஹரிகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். அங்கு இருந்தவர்கள் இதுகுறித்து ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஹரிகிருஷ்ணன் சிறிது நேரத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பள்ளியின் அருகே அபாயகரமான சாலை வளைவில் சிக்னல் இல்லாமலும் எந்தவிதமான எச்சரிக்கை பலகை வைக்கப்படாமல் தடுப்புச்சுவர் உள்ளதாகவும் இதனால் விபத்து நேர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.