உள்ளூர் செய்திகள்

தற்கொலை செய்த மகன் பிணத்துடன் 3 நாட்கள் இருந்த மூதாட்டி

Published On 2022-07-25 06:18 GMT   |   Update On 2022-07-25 06:18 GMT
  • சிபி சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டு 3 நாட்கள் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
  • உடனடியாக போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை:

கோவை ஆவாரம்பாளையம் அருகே உள்ள ஸ்ரீவள்ளி நகரை சேர்ந்தவர் சிபி சுப்பிரமணியம் (வயது 43). திருமணமாகவில்லை.

இவர் தனது தாய் வசந்தா (65) என்பவருடன் வசித்து வந்தார். அவரது தாய் மனநலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்தார். அவரை சிபி சுப்பிரமணியம் கவனித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. மேலும் கதவு 4 நாட்களுக்கு மேலாக திறக்கப்படாமல் இருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டிய போது யாரும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.

அப்போது சிபி சுப்பிரமணியம் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று அவரது உடலை ஆய்வு செய்தனர். அப்போது சிபி சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டு 3 நாட்கள் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. உடனடியாக போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டிற்குள் மகன் தற்கொலை செய்து கொண்டது கூட தெரியமால் அவரது தாய் வசந்தா கடந்த 3 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிபி சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News