உள்ளூர் செய்திகள்

ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்- கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வேண்டுகோள்

Published On 2022-10-31 10:55 GMT   |   Update On 2022-10-31 10:55 GMT
  • மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
  • அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

திருவள்ளூர்:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதையடுத்து ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மிக கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. எனவே அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News