உள்ளூர் செய்திகள்

மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்கில் மகன்களை போலீசார் கைது செய்ததால் தாய் தற்கொலை

Published On 2023-11-17 14:23 IST   |   Update On 2023-11-17 14:23:00 IST
  • சீனிவாசன் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
  • தற்கொலை குறித்து வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர்:

பூந்தமல்லி அடுத்த கொத்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி அமுதா (40). இவரது 2 மகன்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு தொடர்பாக வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே சீனிவாசன் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மகன்கள் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் கணவரும் மதுகுடித்து வந்தால் மனவேதனை அடைந்த அமுதா விட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News