உள்ளூர் செய்திகள்

பஞ்சாயத்து தலைவர் மகனிடம் பணம் பறிப்பு- 2 பேர் கைது

Published On 2023-01-16 11:22 GMT   |   Update On 2023-01-16 11:22 GMT
  • கிருஷ்ணராஜை வழிமறித்து பொங்கல் செலவுக்கு ரூ.5 ஆயிரம் கேட்டார். ஆனால் கிருஷ்ணராஜ் கொடுக்க மறுத்து விட்டார்.
  • ஆத்திரமடைந்த கபிலன் கத்தியை காட்டி கிருஷ்ணராஜை மிரட்டினார். பின்னர் அவரது சட்டை பையில் இருந்த ரூ.1000-த்தை பறித்து சென்றார்.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே வளவனூர் போலீஸ் சரகம் எஸ்.மேட்டுபாளையத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவரது மகன் கிருஷ்ணராஜ் (வயது 39). இவர் அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெரு மேம்பாலம் பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த கபிலன் வந்தார். இவர் கிருஷ்ணராஜை வழிமறித்து பொங்கல் செலவுக்கு ரூ.5 ஆயிரம் கேட்டார். ஆனால் கிருஷ்ணராஜ் கொடுக்க மறுத்து விட்டார். ஆத்திரமடைந்த கபிலன் கத்தியை காட்டி கிருஷ்ணராஜை மிரட்டினார். பின்னர் அவரது சட்டை பையில் இருந்த ரூ.1000-த்தை பறித்து சென்றார்.

அதிர்ச்சியடைந்த கிருஷ்ணராஜ் கூச்சல போட்டார். ஆத்திரம் அடைந்த கபிலன், அவருடன் வந்த புதுவை நெல்லித்தோப்பை சேர்ந்த கவுதம் ஆகிய 2 பேரும் 2 நாட்டு வெடிகுண்டுகளை சாலையில் வீசி கிருஷ்ணராஜை மிரட்டினர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குபதிவு செய்து கபிலன், கவுதமன் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News