உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே இறந்து கிடந்த புள்ளி மான்

Published On 2023-06-13 08:09 GMT   |   Update On 2023-06-13 08:10 GMT
  • வண்ணிப்பாக்கம் பகுதியில் இறந்த நிலையில் புள்ளிமான் கிடந்தது.
  • வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றினர்.

மீஞ்சூரை அடுத்த வண்ணிப்பாக்கம் பகுதியில் இறந்த நிலையில் புள்ளிமான் கிடந்தது. இதுகுறித்து ஊராட்சி தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம் மீஞ்சூர் போலீசுக்கும், கும்மிடிப்பூண்டி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றினர். தண்ணீர் தேடி வந்த போது நாய்கள் கடித்ததில் புள்ளிமான் இறந்து இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News