உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் அமைச்சர்-கலெக்டர் மரியாதை

Published On 2022-09-15 10:21 GMT   |   Update On 2022-09-15 10:21 GMT
  • அண்ணாவின் இல்லம் அருகே கூடி இருந்த பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் இனிப்புகளை வழங்கி அண்ணாவின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினர்.
  • பொன்னேரி பழைய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம்:

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்து வாழ்ந்த அவரது நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம், மாணவரணி மாநில செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதில் காஞ்சிபும் மாநகராட்சி மேயர் யுவராஜ் மகாலட்சுமி, வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஒன்றியக்குழு தலைவர்கள் மலர்கொடிகுமார், தேவேந்திரன், கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், நிர்வாகிகள் மைதிலி, காஞ்சி பன்னீர்செல்வம், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், பாலாஜி, ஜெயராஜ், திலக்குமார், வாலாஜாபாத் அரிக்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அண்ணாவின் இல்லம் அருகே கூடி இருந்த பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் இனிப்புகளை வழங்கி அண்ணாவின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினர். பொன்னேரி பழைய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன் ராஜா, கவுன்சிலர் பானு பிரசாத், நகர செயலாளர் செல்வகுமார், முன்னாள் தலைவர் பா. சங்கர், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், கவுன்சிலர்கள் செந்தில், சுரேஷ், அபிராமி விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் சுகுமாரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருத்தணி சித்தூர் சாலையில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ.அரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News