உள்ளூர் செய்திகள்

எம்.ஜி.ஆர்.நகரில் இளம்பெண் மீது தாக்குதல்- வாலிபர் கைது

Published On 2023-07-10 10:00 GMT   |   Update On 2023-07-10 10:00 GMT
  • கார்த்திக் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

சென்னை,எம்.ஜி.ஆர்.நகர்,அடுத்த ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது32). இவருக்கும் அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை பார்த்து வரும் இளம்பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது.

கார்த்திக் வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்ததால் இளம்பெண் அவரை பிரிந்தார். இந்த நிலையில் இளம்பெண் அப்பகுதியில் வேறு ஒரு வாலிபருடன் பேசிக் கொண்டு இருந்தார். இதனை கண்டு ஆத்திரமடைந்த கார்த்திக் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

Tags:    

Similar News