உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 103.85 அடியாக உயர்வு

Published On 2023-02-14 09:51 IST   |   Update On 2023-02-14 09:51:00 IST
  • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
  • நேற்று 103.83 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 103.85 அடியாக உயர்ந்து உள்ளது.

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஓகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு, விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1616 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1605 கன அடியாக குறைந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று 103.83 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 103.85 அடியாக உயர்ந்து உள்ளது.

Tags:    

Similar News