உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,616 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2023-02-13 09:28 IST   |   Update On 2023-02-13 09:28:00 IST
  • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
  • நேற்று 103.81 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.83 அடியாக உயர்ந்தது.

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு, விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,466 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,616 கன அடியாக அதிகரித்து உள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று 103.81 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.83 அடியாக உயர்ந்தது.

Tags:    

Similar News