உள்ளூர் செய்திகள்

மயிலாடுதுறை மீனவர்களுக்கு வருகிற 4-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு: பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு

Published On 2023-01-02 07:33 GMT   |   Update On 2023-01-02 10:25 GMT
  • ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மயிலாடுதுறை மீனவர்கள் 4 பேரையும் கடல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர்.
  • மயிலாடுதுறை மீனவர்கள் 4 பேரும் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மீனவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சீர்காழி:

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 60க்கும் மேற்பட்டோர் சுமார் 15க்கும் மேற்பட்ட படகுகளில் கடந்த 27-ந்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன் மற்றும் சக்திவேல் ஆகிய 4 பேரும் ஒரு படகில் மீன் பிடிக்க சென்று இருந்தனர். இந்நிலையில் அவர்கள் மீன் பிடிக்க கடலில் வலை வீசி காத்திருந்தனர். அப்போது திடீரென வலைகள் அறுந்து சென்று உள்ளது.

இதைத் தொடர்ந்து மீனவர்கள் வலையை எடுக்கும் முயற்சியில் கடலில் எல்லை தாண்டி சென்று உள்ளனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் 4 பேரையும் கடல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மீனவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் பருத்தித் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட 4 மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து நீதிபதி, மீனவர்கள் பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன், சக்திவேல் ஆகிய 4 பேரும் வருகிற 4-ந்தேதி வரை யாழ்பாணம் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News