சட்டை பையில் இருந்து ரூ.1000 பணம் எடுத்ததால் மூதாட்டியை கல்லை போட்டு கொலை செய்த பேரன் கைது
- போலீசார் மீண்டும் என்னிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் மூதாட்டியை கொலை செய்தது ஒப்பு கொண்டேன் என கூறினார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மூதாட்டியை கொலை செய்ததாக வெங்கடேசனை கைது செய்து ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்துள்ள கும்மனூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னியம்மாள். மூதாட்டியான இவர் கடந்த கடந்த மாதம் 31-ந்தேதி அன்று கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து கல்லாவி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது மூதாட்டி கொலை காரணம் பற்றி எதுவும் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இதையடுத்து போலீசார் நேற்று மூதாட்டியின் பேரன் வெங்கடேசன் (வயது45) என்பவரை பிடித்து துருவி துருவி விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலீசாரிடம் கூறுகையில் எனது பாட்டி பொன்னியம்மாள் என்னுடைய சட்டை பையில் இருந்து ரூ.1000 பணம் எடுத்துள்ளார்.
இது பற்றி கேட்டதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்ததில் நான் எனது பாட்டி என்று கூட பார்க்காமல் பொன்னியம்மாளை கல்லை போட்டு கொலை செய்தேன்.
இது பற்றி யாருக்கும் தெரியாத வகையில் நான் வீட்டில் வழக்கம் போல் இருந்தேன். போலீசார் என்னிடம் முதலில் விசாரணை நடத்திய போது நான் இந்த கொலை குறித்து எதுவும் தெரியாது என்று கூறினேன்.
பின்னர் போலீசார் மீண்டும் என்னிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் மூதாட்டியை கொலை செய்தது ஒப்பு கொண்டேன் என கூறினார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து மூதாட்டியை கொலை செய்ததாக வெங்கடேசனை கைது செய்து ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.