உள்ளூர் செய்திகள்

பூந்தமல்லி அருகே மாநகர பஸ் டிரைவரை தாக்கியவர் கைது

Published On 2022-08-17 12:28 IST   |   Update On 2022-08-17 12:28:00 IST
  • திருமழிசை பஸ் நிறுத்தத்தில் நின்றபோது மர்ம நபர்கள் டிரைவர் திருநாவுக்கரசை தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்தது விசாரணை நடத்தி வந்தனர்.

திருவள்ளூர்:

பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற மாநகர பஸ் கடந்த வாரம் திருமழிசை பஸ் நிறுத்தத்தில் நின்றபோது மர்ம நபர்கள் டிரைவர் திருநாவுக்கரசை தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தது விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் டிைரவரை தாக்கியதாக திருமழிசை பிரையாம்பத்து பகுதியைச் சேரந்த வினோத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் சதீஷ், மகேஷ் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Similar News