உள்ளூர் செய்திகள்

குன்றத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் மர்மச்சாவு வழக்கில் மகன் கைது

Published On 2022-08-26 17:11 IST   |   Update On 2022-08-26 17:11:00 IST
  • குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் கலைஞர் நகரை சேர்ந்தவர் நசீர்பாட்ஷா.
  • போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து முகமது அமீரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி:

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் கலைஞர் நகரை சேர்ந்தவர் நசீர்பாட்ஷா (வயது 40). ஆட்டோ டிரைவர். அவரது மனைவி பஷீரா (35), அவர்களது மகன் முகமது அமீர் (20). நசீர் பாட்ஷா. சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்து சில நாட்களுக்கு முன் வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் நசீர்பாட்ஷா தலையில் காயத்துடன் இறந்து கிடப்பதாக அவரது மகன் தகவல் தெரிவித்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலையில் காயம் இருந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரது மகனிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அதில் நேற்று முன்தினம் மனைவி மற்றும் மகனை நசீர்பாட்ஷா உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். அப்போது தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த மகன் கட்டையை பறித்து திருப்பி தாக்கியதில் தந்தை இறந்தது தெரியவந்தது. இதையடுத்து குன்றத்தூர் போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து முகமது அமீரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News