குன்றத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
- பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு பவுன் தங்க நகை, மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
- குன்றத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
குன்றத்தூர்:
குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 70). இவரது மகன் வெங்கடேசன் (43), போரூரில் சொந்தமாக கம்பெனி நடத்தி வருகிறார். இவரது தந்தை கிருஷ்ணனுக்கு நேற்று முன்தினம் 70 வது பிறந்தநாள் என்பதால் திருவல்லிக்கேணியில் உள்ள மண்டபத்திற்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்து விட்டு சினிமா படம் பார்த்து விட்டு இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு பவுன் தங்க நகை, மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து குன்றத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.