குன்றத்தூர் அருகே சாலை தடுப்பில் என்ஜினீயரிங் கல்லூரி பஸ் மோதல்- 20 மாணவர்கள் காயம்
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் வேகமாக மோதியது.
- விபத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பூந்தமல்லி:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுகோட்டையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரியில் படிக்கும் பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் சுமார் 30-பேருடன் கல்லூரி பஸ் இன்று காலை 8 மணி அளவில் குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் வேகமாக மோதியது.
இதில் கல்லூரி பஸ்சின் முன்பகுதி நசுங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மாணவ-மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அலறினர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த அனைவரும் குரோம்பேட்டை அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காயம் அடைந்த இரண்டு மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.