உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி முதல் கொண்டை ஊசி வளைவில் 30 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து பாதிரியார் பலி

Published On 2023-05-16 09:51 IST   |   Update On 2023-05-16 09:51:00 IST
  • ஒரு நேர போராட்டத்துக்கு பிறகு படுகாயம் அடைந்த பாதிரியார் டேவிட் ஐசக் மற்றும் அஸ்வின் பிரபாகரன் ஆகியோரை மீட்டனர்.
  • மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேட்டுப்பாளையம்:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மிஷன் காம்பவுண்டை சேர்ந்தவர் டேவிட் ஐசக் (வயது 67). இவர் அங்குள்ள பெதஸ்தா தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தார்.

நேற்று இவர் தேவாலய ஊழியர் சீமான் வீதியை சேர்ந்த அஸ்வின் கிருபா கரன் (27) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவைக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை அஸ்வின் கிருபாகரன் ஓட்டி வந்தார்.

மோட்டார் சைக்கிளில் கோத்தகிரி முதல் கொண்டை ஊசி வளைவு பவானி காட்சி முனை அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மேட்டுப்பாளையம் போலீசாருர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் ஒரு நேர போராட்டத்துக்கு பிறகு படுகாயம் அடைந்த பாதிரியார் டேவிட் ஐசக் மற்றும் அஸ்வின் பிரபாகரன் ஆகியோரை மீட்டனர்.

இதனை தொடர்ந்து போலீசார் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாதிரியார் டேவிட் ஐசக் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அஸ்வின் கிருபாகரன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News