உள்ளூர் செய்திகள்

புதிய பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்

Published On 2024-03-12 14:12 IST   |   Update On 2024-03-12 14:13:00 IST
  • சாலையை சரி செய்ய ரூபாய் 35 கோடி நிதி தமிழ் நாடு அரசு ஒதுக்கீடு செய்தது.
  • மாவட்ட நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கொல்லங்கோடு வள்ளவிளை கிராமத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக போக்குவரத்து தடைப்பட்டிருந்த வள்ளவிளை இடப்பாடு கடலோர சாலையை சரி செய்ய தமிழக அரசிடம் பரிந்துரை செய்து இதற்காக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் அவர்களுடன் சேர்ந்து தொடர் முயற்சிகள் எடுத்த பலனாக சாலையை சரி செய்ய ரூபாய் 35 கோடி நிதி தமிழ் நாடு அரசு ஒதுக்கீடு செய்தது.

இந்த சாலை பணிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.


அதனை தொடர்ந்து நீரோடி கிராமத்தில் இருந்து மார்த்தாண்டம் வரை புதிய பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாவட்ட நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், பங்கு தந்தையர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News