உள்ளூர் செய்திகள்

காட்டாங்கொளத்தூர் அருகே மதுவிற்ற மூதாட்டி கைது

Published On 2022-09-04 19:52 IST   |   Update On 2022-09-04 19:52:00 IST
  • காட்டாங்கொளத்தூர் துலுக்காத்தம்மன் கோவில் பின்புறம் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் துலுக்காத்தம்மன் கோவில் பின்புறம் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கலா (வயது 62) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News