உள்ளூர் செய்திகள்

வடமாநில வாலிபர் தற்கொலை

Published On 2023-06-21 17:26 IST   |   Update On 2023-06-21 17:26:00 IST
  • சஞ்சய் ராவத்தை மீட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம்:

ஒடிசா மாநிலம் பகத்காபள்ளி, கம்ஜம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் ராவத் (23). இவர் அதே பகுதியை சேர்ந்த மேஸ்திரி ஆனல் நாயக் என்பவரின் கீழ் கீழம்பி கிராமத்தில் சென்னையில் இருந்து செயல்படும் கட்டுமான நிறுவனம் கட்டிவரும் கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கீழம்பி சந்திப்பு பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு அருகில் உள்ள மரத்தில் நைலான் கயிற்றால் தூக்கு மாட்டிக்கொண்டார்.

இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் சஞ்சய் ராவத்தை மீட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சஞ்சய் ராவத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News