உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் அருகே மேம்பால தடுப்புச் சுவரில் மினிலாரி மோதி டிரைவர் பலி

Published On 2023-03-30 04:00 IST   |   Update On 2023-03-30 04:00:00 IST
  • மினிலாரி மேம்பால தடுப்புச் சுவரின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த டிரைவர் சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
  • காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம்:

திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் தாலுக்கா, இடுங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சின்ராஜ் மகன் சங்கர் (40). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மினிலாரியில் வேலூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார்.

அப்போது, காஞ்சிபுரம் அருகே அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி அருகில் மேம்பாலத்தின் மீது வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மினிலாரி மேம்பால தடுப்புச் சுவரின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த டிரைவர் சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் உயிரிழந்த டிரைவர் சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து உயிரிழந்த சங்கரின் தந்தை சின்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News