உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் அருகே வேன் டிரைவர் கல்லால் அடித்து கொலை- 2 வாலிபர்கள் கைது

Published On 2023-04-22 12:47 IST   |   Update On 2023-04-22 12:47:00 IST
  • போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • பணம் கொடுக்காததால் வேன் டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், பாவாபேட்டை தெருவை சேர்ந்தவர் அயூப் கான்(வயது50).வேன் டிரைவர்.

நேற்று இரவு அவர் சவாரிக்கு சென்றுவிட்டு ரங்கசாமி குளம் பகுதியில் வேனை நிறுத்தினார். பின்னர் அயூப்கான் அங்கு மதுகுடித்ததாக தெரிகிறது.

அப்போது அவ்வழியே மதுபோதையில் 2 வாலிபர்கள் வந்தனர்.

அவர்கள் அயூப்கானிடம் பணம் கேட்டு மிரட்டினர். இதனை அயூப்கான் கண்டித்தார். இதனால் அவருக்கும், வாலிபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் அயூப்கானை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். மேலும் அருகில் கிடந்த கல்லால் அவரது தலையில் கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த அயூப்கான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவ்வழியே சென்றவர்கள் அயூப்கான் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கொலையில் தொடர்புடைய சேக்குப்பேட்டையை சேர்ந்த பிரதீப் குமார் (20), பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த வினோத்குமார்(23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பணம் கொடுக்காததால் வேன் டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News