உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 140 ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியது

Published On 2023-11-22 09:48 GMT   |   Update On 2023-11-22 10:01 GMT
  • 297 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன.
  • வாயலூர் தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி 2170 கன அடி நீர் உபரி வெளியேறி வருகிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள 909 ஏரிகளில் 140 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

மேலும் 161 ஏரிகள் 75 சதவீதமும், 221 ஏரிகள் 50 சதவீதமும், 297 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. இதேபோல் செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மாவட்டங்களில் செல்லக்கூடிய பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட வாயலூர் தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி 2170 கன அடி நீர் உபரி வெளியேறி வருகிறது.

Tags:    

Similar News