உள்ளூர் செய்திகள்

கல்பாக்கம் அருகே இளம்பெண் மகனுடன் மாயம்

Published On 2023-06-25 07:51 GMT   |   Update On 2023-06-25 07:51 GMT
  • அம்பிகா, 5வயது மகனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து மகனுடன் மாயமான இளம்பெண்ணை தேடிவருகிறார்கள்.

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அடுத்த வாயலூரை சேர்ந்த சுதாகர். இவரது மனைவி அம்பிகா (வயது30). கடந்த 14-ந் தேதி அம்பிகா, 5வயது மகனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. உறவினர்கள், வீடுகளில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து சுதாகர் சதுரங்கபட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மகனுடன் மாயமான இளம்பெண்ணை தேடிவருகிறார்கள்.

Tags:    

Similar News