உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவராக ஜெயபிரகாஷ் நியமனம்

Published On 2023-11-07 14:01 IST   |   Update On 2023-11-07 14:01:00 IST
  • கே. ஜெயக்குமார் எம். பி., மாநில தலைவர் கே. எஸ். அழகிரி ஆகியோர் நியமித்துள்ளனர்.
  • காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பொன்னேரி:

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகளை மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. பரிந்துரையின் பேரில் செயல் தலைவர் டாக்டர் கே. ஜெயக்குமார் எம். பி., மாநில தலைவர் கே. எஸ். அழகிரி ஆகியோர் நியமித்துள்ளனர்.

அதன்படி திருவள்ளூர் வடக்கு மாவட்ட துணை தலைவராக கொண்டக்கரை ஆர்.ஜெயபிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News