உள்ளூர் செய்திகள்

திருத்தணியில் மனைவியை வெட்டி கொன்ற கணவன் கைது

Published On 2023-07-01 06:28 GMT   |   Update On 2023-07-01 06:28 GMT
  • விநாயகம் கூலி வேலைக்கும், மனைவி கிரிஜா வீட்டு வேலைக்கும் சென்று வந்தனர்.
  • அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது.

திருத்தணி:

திருத்தணி நரசிம்மசுவாமி கோவில் தெருவில் வசிப்பவர் விநாயகம் (42). இவருக்கும் கிரிஜா (34) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேவா என்கிற மகன் உள்ளார். இவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் கடந்த 14 வருடங்களாக பெங்களூரில் கூலி வேலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருத்தணியில் வந்து நரசிம்ம சுவாமி கோவில் தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் விநாயகம் கூலி வேலைக்கும், மனைவி கிரிஜா வீட்டு வேலைக்கும் சென்று வந்தனர். அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது. நேற்று இரவு வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை விநாயகம் நள்ளிரவில் கத்தியை எடுத்து தலை, கை, கால், மார்பு என பல பகுதிகளில் சரமாரியாக வெட்டி உள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆனால் விநாயகம் வீட்டில் உள்பக்கமாக பூட்டு போட்ட காரணத்தால் யாரும் உள்ளே சென்று காப்பாற்ற முடியவில்லை.

இதற்கிடையே வெட்டப்பட்ட கிரிஜா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார். திருத்தணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விநாயகத்தை கைது செய்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். இறந்து போன கிரிஜாவின் உடலை கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News