உள்ளூர் செய்திகள்
- மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை முதலே பலத்த இடியுடன் கனமழை கொட்டியது.
- மழை காரணமாக புராதன சின்ன பகுதிகளான ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
மாமல்லபுரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விட்டு, விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை முதலே பலத்த இடியுடன் கனமழை கொட்டியது.
இதனால் கடற்கரை ரிசார்ட்டுகளில் தங்கியிருந்த வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நடைபயிற்சி சென்று கடற்கரை கோவிலை ரசித்து பார்க்க முடியாமல் அறைகளில் முடங்கினர். மேலும் மழை காரணமாக புராதன சின்ன பகுதிகளான ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.