உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே குட்கா பதுக்கி விற்பனை செய்தவர் கைது

Published On 2023-09-06 11:15 GMT   |   Update On 2023-09-06 11:15 GMT
  • போலீசார் சோதனை செய்ததில் மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் ரெயில்வே கேட் அருகே குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
  • குட்கா விற்பனை செய்த தவுலத் கானை கைது செய்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொன்னேரி:

மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியில் குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஆவடி காவல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது.

ஆவடி ஆணையர் சங்கர் உத்தரவின் படி இணை ஆணையர் விஜயகுமார் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர் குமரேசன் தலைமையில் மீஞ்சூர் ஆய்வாளர் காளிராஜ் மற்றும் போலீசார் மீஞ்சூர் பகுதியில் தீவிர சோதனை செய்ததில் மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் ரெயில்வே கேட் அருகே குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

இது குறித்து விசாரித்த போது சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த தவ்லத் கான் மீஞ்சூர் குடோனில் பதுக்கி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.

பின்னர், குடோனில் பதுக்கி இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான பான் மசாலா குட்கா, புகையிலைபொருட்களை பறிமுதல் செய்து விற்பனை செய்த தவுலத் கானை கைது செய்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News