தேர்தல் பறக்கும் படை சோதனையில் 50 மூட்டை குட்கா சிக்கியது
- பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும் காரில் வந்தவர்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
- குட்கா மூட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கெங்கவல்லி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும் காரில் வந்தவர்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து அந்த காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அந்த காரில் இருந்தது மூட்டைகளை பிரிந்து பார்த்த போது அதில் 50 மூட்டைகளில் குட்கா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து குட்கா மூட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் வீரகனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதை தொடர்ந்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து காரின் எண்ணை வைத்து யாருடையது என்பது குறித்தும், குட்கா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.