உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா.

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

Published On 2023-08-10 05:21 GMT   |   Update On 2023-08-10 05:21 GMT
  • கைதானவர்களிடம் இருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  • தென்பாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர டி.எஸ்.பி. சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜராம் தலைமையில் தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்கள் மகாலிங்கம், செந்தில், சாமுவேல், முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மீனவர் காலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் (வயது21), வண்ணார் தெருவை சேர்ந்த உதயகுமார் (24), கீழசண்முகபுரம் பகுதியை சேர்ந்த விகாஷா (25) மற்றும் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (32) ஆகியோர் என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட லோகேஸ்வரன் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 3 வழக்குகளும், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 4 வழக்குகளும், உதயகுமார் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 3 வழக்குகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News