உள்ளூர் செய்திகள்

பூண்டி ஏரியில் தவறி விழுந்து மீனவர் பலி

Published On 2023-03-21 08:45 GMT   |   Update On 2023-03-21 08:45 GMT
  • பூண்டி ஏரியில் தவறி விழுந்து மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த அரும்பாக்கம் இருளர் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது50). மீனவர். இவர் அதிகாலை மீன் பிடிப்பதற்காக பூண்டி ஏரிக்கு படகில் சென்றார்.

அப்போது திடீரென மயங்கிய அவர் பூண்டி ஏரிக்குள் தவறி விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். இன்று காலை அவரது உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News