உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு
- திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்.
- மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மகிந்தரை கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் பேரம்பாக்கம் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஜெயக்குமாரை வழிமறித்த நரசிங்கபுரம் பெரிய தெருவை சேர்ந்த மகிந்தர் என்பவர் கத்தியால் வெட்டி ரூ. 700-யை பறித்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மகிந்தரை கைது செய்தனர்.