உள்ளூர் செய்திகள்

இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம்- வாக்குச்சாவடி அலுவலர் குலோத்துங்கன்

Published On 2023-02-27 08:29 IST   |   Update On 2023-02-27 08:29:00 IST
  • தேர்தலில் வாக்களிக்க வரும்போது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
  • இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் என வாக்குச்சாவடி அலுவலர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு இன்று கொண்டு செல்லப்படும். அங்கு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

தேர்தலில் வாக்களிக்க வரும்போது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் என வாக்குச்சாவடி அலுவலர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்றவை மட்டும் இருந்தால் வாக்களிக்க முடியாது என அலுவலர் தெரிவித்ததால் அக்ரஹாரம் வாக்குச்சாவடியில் சலசலப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News