உள்ளூர் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 59.22 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2023-02-27 10:05 GMT   |   Update On 2023-02-27 10:05 GMT
  • இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 59.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
  • தற்போது வரை 65,350 ஆண்களும், 69, 400 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 8 பேரும் என மொத்தம் 1,34,758 பேர் வாக்களித்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்து பெண்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இதேப்போல் இளைஞர்கள், முதியவர்களும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 59.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போது வரை 65,350 ஆண்களும், 69,400 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 8 பேரும் என மொத்தம் 1,34,758 பேர் வாக்களித்துள்ளனர்.

Tags:    

Similar News