உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 530 காசுகளாக உயர்வு

Published On 2023-11-06 03:53 GMT   |   Update On 2023-11-06 03:53 GMT
  • முட்டைக்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
  • விலை உயர்வு இன்று காலை முதல் அமுலுக்கு வந்தது.

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் 6 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

இதன் மூலம் தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு போக மீதம் உள்ள முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த முட்டைக்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 525 காசுகளாக இருந்த முட்டை விலை 530 காசுகளாக உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமுலுக்கு வந்தது.

கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கடந்த 3-ந் தேதி முதல் 89 ரூபாயாகயும், முட்டை கோழி விலை 102 ரூபாயாகவும் நீடிக்கிறது. இந்த விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News