உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளியில் பல் மருத்துவ முகாம்
- மாணவர்களுக்கு பற்களை பரிசோதனை செய்து தேவைப்படுபவர்களுக்கு மாத்திரைகள் இலவசமாக வழங்கி சிகிச்சை அளித்தார்கள்.
- நிகழ்ச்சியில் பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்வி மற்றும் ஆசிரியர்களும், அரிமா சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
வாலாஜாபாத்:
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உடல் நலம் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் 500 மாணவர்களுக்கு வாலாஜாபாத்தில் செயல்படும் அரிமா சங்கம் மற்றும் அஞ்சலாட்சி பல் ஆஸ்பத்திரி இணைந்து பல் பரிசோதனை முகாமை நடத்தியது. முகாமில் பல் மருத்துவ சிகிச்சை சிறப்பு டாக்டர் ஆச்சியப்பன் தலைமையில் பல் மருத்துவர்கள் கலந்துகொண்டு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பற்களை பரிசோதனை செய்து தேவைப்படுபவர்களுக்கு மாத்திரைகள், பற்பசை போன்றவற்றை இலவசமாக வழங்கி சிகிச்சை அளித்தார்கள்.
நிகழ்ச்சியில் பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்வி மற்றும் ஆசிரியர்களும், அரிமா சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.