காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வாரவிழாக்குழு கூட்டம்
- நவம்பர் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா மிகக் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய அலுவலர் டாக்டர்.எஸ். சதிஷ்குமார் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்:
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா மிகக் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளரும் விழாக்குழு தலைவருமான பா. ஜெயஸ்ரீ மற்றும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநரும் விழாக்குழு துணைத்தலைவருமான மு.முருகன் தலைமை தாங்கினார். இதில் காஞ்சிபுரம் சரக துணைப்பதிவாளர் த. சுவாதி, விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் கே. சத்தியநாராயணன், கைத்தறித்துறையின் கைத்தறி அலுவலர் கோ. மோகன்ராம், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய அலுவலர் டாக்டர்.எஸ். சதிஷ்குமார் கலந்து கொண்டனர்.