உள்ளூர் செய்திகள்
விபத்தில் சிக்கிய பஸ்.

பல்லடம் அருகே பஸ்கள் மோதல்- பனியன் நிறுவன தொழிலாளர்கள் 27 பேர் காயம்

Published On 2022-11-15 07:49 GMT   |   Update On 2022-11-15 07:49 GMT
  • பனியன் நிறுவன பேருந்தில் இருந்த பலருக்கு காயம் ஏற்பட்டது.
  • விபத்து குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செம்மிபாளையம் பிரிவில் இருந்து அய்யம்பாளையம் ரோட்டுக்கு செல்வதற்காக தனியார் பனியன் நிறுவன பேருந்து இன்று காலை கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. அப்போது பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக பனியன் நிறுவன பேருந்து மீது பின்பக்கமாக மோதியது.

இதனால் நிலை தடுமாறி அருகே உள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது. பனியன் நிறுவன பேருந்தில் இருந்த பலருக்கு காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பனியன் நிறுவனத்தைச் சேர்ந்த சரஸ்வதி, புவனேஸ்வரி, மாடசாமி, செல்வராஜ் உள்பட 27 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News