உள்ளூர் செய்திகள்

புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி.

Published On 2024-03-11 15:24 IST   |   Update On 2024-03-11 15:25:00 IST
  • புத்தக வெளியீட்டு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.
  • இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் எழுதிய "மன் கீ பாத். மனதின் குரலுக்கு ஓர் இந்திய குடிமகனின் 108 கேள்விகள்" எனும் புத்தக வெளியீட்டு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.


மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெய ரஞ்சன் புத்தகத்தை வெளியிட, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பெற்று கொண்டார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் உட்பட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News