உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே பூண்டி கால்வாயில் வாலிபர் பிணம்

Published On 2022-08-24 13:16 IST   |   Update On 2022-08-24 13:16:00 IST
  • சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.
  • பூண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர்:

சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இங்கிருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் முதல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்பப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் திருவள்ளூரைஅடுத்த திருவூர் அருகே பூண்டி ஏரி இணைப்பு கால்வாயில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக மீட்கப்பட்ட வாலிபருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரிய வில்லை.

அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. உடல் முற்றிலும் அழுகிய நிலையில் காணப்பட்டது.

இதையடுத்து பூண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News