உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் பா.ஜனதா கட்சியினர் விழிப்புணர்வு பேரணி

Published On 2022-08-10 07:13 GMT   |   Update On 2022-08-10 07:13 GMT
சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசியக் கொடியை ஏற்றுவோம்.

திருவள்ளூர்:

சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசியக் கொடியை ஏற்றுவோம் என்பதை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் திருவள்ளூரில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் டில்லி பாபு தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் பேரணியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பார்வையாளர் லோகநாதன், ஓபிசி அணி மாநில செயலாளர் ராஜ்குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், கருணாகரன், ஆர்யா சீனிவாசன், ஜெய்கணேஷ், மாவட்டச் செயலாளர்கள் பாலாஜி, பன்னீர்செல்வம், சங்கீதா, நகரத் தலைவர் சதீஷ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News