உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே தாழ்வான உயர் அழுத்த மின்கம்பியால் உயிர்பலி ஏற்படும் அபாயம்- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Published On 2023-05-21 06:36 GMT   |   Update On 2023-05-21 06:36 GMT
  • அச்சிரபள்ளம் குளத்தின் அருகே செல்லும் மின் கம்பி தாழ்வாக செல்கின்றன.
  • உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் முன்பு இந்த ஆபத்தான மின்கம்பியை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த மெதூர் துணை மின் நிலையத்தில் இருந்து அச்சிரம்பள்ளம் கிராமத்திற்கு உயர்அழுத்த மின்கம்பம் செல்கிறது.

இந்தநிலையில் அச்சிரபள்ளம் குளத்தின் அருகே செல்லும் மின் கம்பி தாழ்வாக செல்கின்றன.தாவிப்பிடித்தால் எட்டும் உயரத்தில் இருப்பதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் முன்பு இந்த ஆபத்தான மின்கம்பியை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, அச்சிரபள்ளம் குளத்தின் அருகே செல்லும் மின்கம்பி மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லவே அச்சம் அடைந்து வருகிறோம்.

சிறுவர்கள் குளத்தில் குளிக்க செல்லும் போது விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் இந்த தாழ்வான மின் கம்பியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News