உள்ளூர் செய்திகள்
அங்கன்வாடி கட்டிட மேற்கூரை சிமெண்டு பெயர்ந்து விழுந்தது
- பொன்னேரியை அடுத்த மெதுர் ஊராட்சிக்குட்பட்ட காலனியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
- கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து வருகிறது.
பொன்னேரியை அடுத்த மெதுர் ஊராட்சிக்குட்பட்ட காலனியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் மாணவ-மாணவிகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.