உள்ளூர் செய்திகள்

அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்பியது

Published On 2022-12-13 11:33 GMT   |   Update On 2022-12-13 11:33 GMT
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக பல்வேறு ஏரிகள், குளங்கள், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
  • காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் மழை நீரால் முழுவதுமாக நிரம்பி மிக ரம்மியமாக காட்சியளிக்கிறது.

காஞ்சிபுரம்:

உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதியன்று தொடங்கியது. அனந்தசரஸ் குளத்திலுள்ள நீராழி மண்டபத்தில் இருந்து அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு பொதுமக்களின் தரிசனத்திற்காக சயன கோலத்திலும், நின்ற கோலத்திலும் என 48 நாட்கள் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டது. அத்திவரதரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா நிறைவு பெற்றதையடுத்து மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார்.

தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக பல்வேறு ஏரிகள், குளங்கள், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் மழை நீரால் முழுவதுமாக நிரம்பி மிக ரம்மியமாக காட்சியளிக்கிறது.

Similar News