உள்ளூர் செய்திகள்

ஆம்பூர் அருகே கார்-லாரி மோதல்- சென்னை வங்கி மேலாளர் பலி

Published On 2023-01-07 10:39 IST   |   Update On 2023-01-07 10:39:00 IST
  • சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தயாகரன்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர்:

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தயாகரன் (வயது60). ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவரது மனைவி சசி மாலா (57). இவர்களுக்கு சரத் பாபு (34), ஆலின் பிரசாத் (24) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களுக்கு சொந்தமாக ஓசூர் பகுதியில் நிலம் ஒன்று உள்ளது. அதனை விற்பதற்காக இன்று காலை குடும்பத்தோடு காரில் சென்னையில் இருந்து ஓசூருக்கு புறப்பட்டனர். காரை சரத் பாபு ஓட்டி சென்றார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வட புதுப்பட்டு சர்க்கரை ஆலை அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி காரில் இருந்த வங்கி மேலாளர் தயாகரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த சசிமாலா, சரத்பாபு, ஆலின் பிரசாத்தை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தயாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News