அம்பத்தூரில் கோவில் கதவை தீ வைத்து எரித்து கொள்ளை
- கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைக்க முயன்று தோல்வி அடைந்து உள்ளனர்.
- கோவில் அலுவலகத்தில் பணம் இருக்கலாம் என்று நினைத்து கதவு பூட்டை உடைக்க முயன்று இருக்கிறார்கள்.
அம்பத்தூர்:
அம்பத்தூர். திருவேங்கடம் நகர். முதல் தெருவில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது.நேற்று இரவு வழக்கம்போல் பூஜை முடிந்ததும் அர்ச்சகர் ரவி கோவில் கதவை பூட்டிச்சென்றார்.
இன்று அதிகாலை கோவிலுக்கு வந்த போது கோவில் நிர்வாக அலுவலகத்தின் கதவு தீப்பற்றி எரிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உண்டியலையும் உடைக்க முயற்சி நடந்து இருந்தது.
இதுகுறித்து அம்பத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இன்ஸ்பெக்டர் அலமேலு மற்றும் போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர்.
நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைக்க முயன்று தோல்வி அடைந்து உள்ளனர். இதனால் கோவில் அலுவலகத்தில் பணம் இருக்கலாம் என்று நினைத்து கதவு பூட்டை உடைக்க முயன்று இருக்கிறார்கள். அதுவும் நடக்காததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் விளக்கில் இருந்த தீபம் ஏற்ற பயன்படும் நெய்யை கதவின் மீது ஊற்றி தீ வைத்து எரித்து திறந்து உள்ளனர். பின்னர் அங்கிருந்த ரூ. 5 ஆயிரம ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக காட்சியை வைத்து போலீசார் கொள்ளையர்கள் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.