உள்ளூர் செய்திகள்

அச்சரப்பாக்கத்தில் வீடுபுகுந்து திருடிய கொள்ளையர்கள் 3 பேரை மடக்கி பிடித்த போலீசார்

Published On 2023-02-03 06:33 GMT   |   Update On 2023-02-03 06:33 GMT
  • கொள்ளையர்கள் 3 பேரை மடக்கி பிடித்தனர். மேலும் 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.
  • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுராந்தகம்:

அச்சரப்பாக்கம், கிழக்கு காந்தி நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் தற்போது சென்னையில் வீடு எடுத்து தங்கி உள்ளார். அச்சரப்பாக்கத்தில் உள்ள இவரது வீடு பூட்டி கிடந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை மர்ம கும்பல் சந்திரசேகரனின் வீட்டின் பூட்டை உடைத்து புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த பொருட்களை அள்ளினர்.

இதற்கிடையே சத்தம் கேட்டு பக்கத்துவீட்டில் வசிக்கும் வேதகிரி, சிவ சங்கரன் ஆகியோர் எழுந்தனர்.

சிவசங்கரன், தனது வீட்டின் முன்பு உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது கொள்ளை கும்பல் புகுந்து இருப்பது தெரிந்தது. இது குறித்து அவர் வேதகிரிக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவர்கள் அச்சரப்பாக்கம் போலீசுக்கு கொள்ளையர்கள் குறித்து கூறினர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சந்திரசேகரனின் வீட்டுக்குள் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் 3 பேரை மடக்கி பிடித்தனர். மேலும் 3 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிப்பட்டவர்கள் சென்னை கீழ்கட்டளையை சேர்ந்த செல்வா, பிரான் சிஸ்ராஜ், மூவசரன் பேட்டையை சேர்ந்த சந்தோஷ் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 2 கத்தி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் தப்பி ஓடியது கூட்டாளிகளான மடிப்பாக்கத்தை சேர்ந்த சிவா, அந்தோனி, அஜித்குமார் என்பது தெரிந்தது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News