உள்ளூர் செய்திகள்

ஊரப்பாக்கத்தில் 80 டன் குப்பைகள் அகற்றம்

Published On 2023-12-08 08:38 GMT   |   Update On 2023-12-08 08:38 GMT
  • குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
  • பாஸ்கர், விஜயச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கூடுவாஞ்சேரி:

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சுடுகாடு அருகே குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்தது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் குப்பைகளை அகற்கும் பணி பணி நடைபெற்றது. இதுவரை சுமார் 80 டன் குப்பைகள் லாரிகளில் எடுத்து செல்லப்பட்டு உள்ளது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி தலைமையிலும், ஒன்றிய கவுன்சிலர்கள் மோகனாகண்ணன், ஜே.கே.தினேஷ், வார்டு கவுன்சிலர்கள் சாந்திகார்த்திக், தேவிநேரு, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயாகருணாகரன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் கெனடிபூபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், சிவகுமார், ஒன்றிய பொறியாளர்கள் கருணாகரன், பாஸ்கர், விஜயச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News