உள்ளூர் செய்திகள்

பலாத்கார முயற்சியில் மூதாட்டியை கொன்ற 72 வயது முதியவர் கைது

Published On 2024-02-03 11:21 GMT   |   Update On 2024-02-03 11:21 GMT
  • முப்புடாதி மாட்டுச்சாணம் கொட்டும் பகுதியில் இறந்து கிடந்தார்.
  • தொடர் விசாரணையில் சம்பவத்தன்று மூதாட்டியிடம் பாலியல் துன்புறுத்தலில் ராமர் ஈடுபட்டுள்ளார்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி பழனி ஆண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி முப்புடாதி (வயது 65).

இவரது கணவர் கிருஷ்ணன் இறந்து விட்டதால் மகன் ராமருடன் வசித்து வந்தார். ராமருக்கு திருமணமாகியதால் அருகில் உள்ள ஆவுடையானூரில் மனைவியுடன் அவர் வசித்து வருகிறார். இதனால் மூதாட்டி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் முப்புடாதி அங்குள்ள மாட்டுச்சாணம் கொட்டும் பகுதியில் இறந்து கிடந்தார். இதனை அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் ஆலங்குளம் டி.எஸ்.பி. பர்ணபாஸ், தென்காசி ஏ.டி.எஸ்.பி. ரமேஷ் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அப்போது அவர் ஆடை இன்றி நிர்வாண நிலையில் காணப்பட்டார். இதனால் அவர் பாலியல் துன்புறுத்தலில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதி தெற்கு தெருவை சேர்ந்த ராமர் (72) என்பவர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர் விசாரணையில் சம்பவத்தன்று மூதாட்டியிடம் பாலியல் துன்புறுத்தலில் ராமர் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ராமர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News